இந்து சமய அறநிலையத் துறை பணிக்கான தேர்வு: 2,995 பேர் எழுதினர்

இந்து சமய அறநிலையத் துறை நிர்வாக அலுவலர் நிலை-3 பணிக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தேர்வை

இந்து சமய அறநிலையத் துறை நிர்வாக அலுவலர் நிலை-3 பணிக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தேர்வை திருநெல்வேலி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 995 பேர் எழுதினர்.
இந்து சமய அறநிலையத் துறை நிர்வாக அலுவலர் நிலை-3 பணிக்கான தேர்வு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமைக்கான தேர்வுக்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்து 816 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. 
பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி உள்பட மொத்தம் 15 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 2 ஆயிரத்து 995 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 2 ஆயிரத்து 821 பேர் வரவில்லை. தேர்வை கண்காணிக்க 4 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com