அப்துல் கலாம் தமிழ் மன்றத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வ.சு.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். உ.சிதம்பரபாண்டியன், சு.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வே.முத்துக்குமாரசாமி வரவேற்றார். பா.வளன் அரசு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மாணவர்-மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார். எம்.சி.ராஜன், ஆறுமுகம், அ.ராசகிளி, கம்பன் இலக்கியச் சங்கத்தலைவர் சிவ.சத்தியமூர்த்தி ஆகியோர் பேசினர்.
புலவர் செந்தில் நாயகம், அருண் சிவாஜி நாகலிங்கம், எஸ்.சுப்பிரமணியன், கோமதிநாயகம், கோ.பூதலிங்கம், பாலசுப்பிரமணியன், வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பாஷ்யம் நன்றி கூறினார்.