தச்சநல்லூர் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளி மாணவிக்கு முதல்வர் பாராட்டு

தச்சநல்லூர் வேதிக் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளி மாணவியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டினார். 

தச்சநல்லூர் வேதிக் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளி மாணவியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டினார். 
திருக்குறளின் 1330 குறள்பாக்களையும் முதலில் இருந்து கேட்டாலும், முடிவில் இருந்து கேட்டாலும் அதன் பொருளுடன் தெளிவாக கூறும் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளி மாணவி மதுரபிரியா, பல்வேறு விருதுகளை வென்று தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலிக்கு வந்த தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பரிசும், பாராட்டும் பெற்றார். 
விருது பெற்ற மாணவியை மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், மாவட்ட அதிமுக செயலர் தச்சை என். கணேச ராஜா, பள்ளித் தாளாளர் செந்தில் பிரகாஷ், இயக்குநர் திலகவதி, பள்ளி முதல்வர் சோமசுந்தரி, ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ- மாணவியர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com