நெல்லை அமமுக  வேட்பாளர் மீது வழக்கு

திருநெல்வேலியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமமுக வேட்பாளர் உள்ளிட்டோர் மீது போலீஸார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

திருநெல்வேலியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமமுக வேட்பாளர் உள்ளிட்டோர் மீது போலீஸார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்நிலையில் புதன்கிழமை திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ரா.ஞானஅருள்மணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்தார். 
அப்போது அவர்கள் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக, அக்கட்சியின் மாவட்டச் செயலர் கல்லூர் இ. வேலாயுதம், வேட்பாளர் ரா.ஞானஅருள்மணி உள்பட 50 பேர் மீது திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com