நெல்லையப்பர் கோயிலில் செங்கோல் வழங்கும் விழா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திரத்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
அருள்மிகு நெல்லையப்பர்-கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.  அதன்படி நிகழாண்டுக்கான விழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  4 ஆம் திருநாளில் பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி-அம்பாள் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதைத் தொடர்ந்து 10 ஆம் திருநாளான புதன்கிழமை செங்கோல் வழங்கும் விழா நடைபெற்றது.
இதற்காக மலர் அலங்காரத்தில் சுவாமி-அம்பாள், சுப்பிரமணியர் ஆகியோர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.  அங்கு சிறப்பு தீபாராதனைக்குப் பின்பு சுவாமியின் திருப்பாதங்கள், செங்கோல் ஆகியவை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன. விழாவில் கோயில் செயல் அலுவலர் பா.ரோஷினி மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com