திருநெல்வேலியில் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
திருநெல்வேலி நகரத்தைச் சேர்ந்த சுடலையாண்டி மகன் அய்யப்பன்(52). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில நாள்களாகவே கடன் பிரச்னையினால் அவதிப்பட்டு வந்தாராம். இதையடுத்து அவர் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து திருநெல்வேலி நகர போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.