தீக்கிரையான வேன்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர், திங்கள்கிழமை காலை  தனது வேனை ஓட்டிக்கொண்டு நெ.1 டோல்கேட், கொள்ளிடம் ஆறு புதிய பாலம் வழியாகச் சென்ற போது, வேன் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. 
சிவக்குமார் வேனை சாலையிலேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பியோடினர். மளமளவென பரவிய தீ வேன் முழுவதும் பற்றி எரியத்தொடங்கியது. இதில், வேன் முழுமையாக தீக்கிரையானது.  தகவலறிந்த திருச்சி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com