திருச்சியில் டிசம்பர் 14ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நடைபெறவுள்ள முகாமில், பிரபல தனியார் நிறுவனங்கள் பங்கேற்று பல்வேறு பணி வாய்ப்புகளை வழங்கவுள்ளனர்.
இதில், 10, 12, மற்றும் பட்டயம், பட்டம் பெற்றவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். தகுதியும் விருப்பமும் உள்ளோர், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 2 மற்றும் உரிய சான்றுகளுடன் பங்கேற்கலாம்.