காரில் ஆயுதங்களுடன் வலம் வந்த 7 பேர் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே காரில் ஆயுதங்களுடன் கிராமத்திற்குள் வலம் வந்த 7 பேரை சனிக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர். 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே காரில் ஆயுதங்களுடன் கிராமத்திற்குள் வலம் வந்த 7 பேரை சனிக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர். 
குமரவாடி மீனாட்சிபுரத்திற்கு சனிக்கிழமை ஆயுதங்களுடன் கார் ஒன்றில் வந்த 7 பேர் அப்பகுதியில் நீண்ட நேரம் சுற்றி வந்தனராம்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் அவர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.அவர்கள் திருச்சி நாகராஜ், இவரின் ஆதரவாளர்களான, திண்டுக்கல் மாவட்டம் தாடிகொம்பு, பெருமாள்கோவில்பட்டி, மேட்டுப்பட்டி மற்றும் மரவப்பட்டியை பகுதிகளை சேர்ந்த வழக்குரைஞர் முத்துவேல் (44), செபஸ்தியான்(36), ராமன்(39), சுப்பிரமணி(38), ரெங்கராஜ்(28), முத்துக்குமார்(22) ஆகியோர் எனத் தெரியவந்தது. இதையடுத்து புகாரின்பேரில் அவர்களைக் கைது செய்த போலீஸார், ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். புதன்கிழமை நடைபெற்ற தகராறை தொடர்புபடுத்தி அந்த 7 பேரும் ஊருக்குள் நுழைந்துள்ளதாக கூறி வையம்பட்டி காவல் நிலையம் முன் திரண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com