திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், கோபுரப்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
திருச்சி கள விளம்பர அலுவலர் கே. தேவி பத்மநாபன், வேளாண் உதவி இயக்குநர் ஆர்.மோகன், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் அபிராமி ஆகியோர் விளக்கினர். பூச்சிக்கொல்லியை பாதுகாப்பாக பயன்படுத்தும் முறை குறித்து இமயம் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவி பி. வித்யா எடுத்துரைத்தார். உழவன் செயலி குறித்து மாணவி எம். சுப்ரியா விளக்கினார்.