மணப்பாறையில் தமிழ்நாடு இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் தேசிய தொழில் பயிற்சி அறிமுக விழா புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஜானகிராமன், பொதுச்செயலாளர் சம்பூர்ணம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் சரவணன், ரகு, வெள்ளைச்சாமி, கஸ்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்றுவிப்பு பயிற்சி பிராந்திய இயக்குனரகதுணை இயக்குனர் மார்வல் தாஸ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார்.
மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 100க்கும் அதிகமான இருசக்கர வாகன பழுதுபார்ப்போர், புதிய வாகன விற்பனை உரிமையாளர்கள், உதிரிபாக விற்பனையாளர்கள் பங்கேற்றனர். முன்னதாக, மாநில ஆலோசகர் ஷாஜஹான் வரவேற்றார். முடிவில். ஆர்.பழனிச்சாமி நன்றி கூறினார்.