தேசிய தடகள போட்டிக்கு மணப்பாறை மாணவிகள் தேர்வு

மணப்பாறையை சேர்ந்த இரண்டு மாணவியர் தேசிய தடகளப் போட்டிகளில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர்.

மணப்பாறையை சேர்ந்த இரண்டு மாணவியர் தேசிய தடகளப் போட்டிகளில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் 19 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் 1,500 மீட்டர் போட்டியில் பாலக்குறிச்சி புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி எஸ்.ராதிகா இரண்டாமிடமும், 17 வயதுக்குள்பட்டோருக்கான 1,500 மீட்டர் ஓட்டப் போட்டியில் மற்றொரு பிளஸ் 2 மாணவி டி.விநோதினி மூன்றாம் இடம் பெற்றனர்.
இதன்மூலம், தடகளப் போட்டிகளில் பங்கேற்க தேர்வாகியுள்ள மாணவியர் இருவரை பள்ளி நிர்வாகம் பாராட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com