மணப்பாறையை சேர்ந்த இரண்டு மாணவியர் தேசிய தடகளப் போட்டிகளில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் 19 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் 1,500 மீட்டர் போட்டியில் பாலக்குறிச்சி புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி எஸ்.ராதிகா இரண்டாமிடமும், 17 வயதுக்குள்பட்டோருக்கான 1,500 மீட்டர் ஓட்டப் போட்டியில் மற்றொரு பிளஸ் 2 மாணவி டி.விநோதினி மூன்றாம் இடம் பெற்றனர்.
இதன்மூலம், தடகளப் போட்டிகளில் பங்கேற்க தேர்வாகியுள்ள மாணவியர் இருவரை பள்ளி நிர்வாகம் பாராட்டியுள்ளது.