துறையூர் வட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் வரும் சனிக்கிழமை (நவ.17) நடைபெறுகிறது.
துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்கிறார். இக் கூட்டத்தில், துறையூர் வட்டத்தில் உள்ள அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எரிவாயு விநியோக ஒருங்கிணைப்பாளர் பங்கேற்கின்றனர். எனவே, துறையூர் வட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களும் இக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு சிலிண்டர் விநியோகத்தில் உள்ள குறைகள் தொடர்பாக புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.