துறையூர் மின் கோட்டத்துக்குள்பட்ட புத்தனாம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (நவ.16) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து துறையூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் பொன்.ஆனந்தகுமார் வெளியிட்ட அறிக்கை: புத்தனாம்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் புத்தனாம்பட்டி, அபினிமங்கலம், சாத்தனூர், திண்ணனூர், இலுப்பையூர், வெள்ளக்கல்பட்டி, நல்லேந்திரபுரம், நடுவலூர், கோட்டாத்தூர், டி.களத்தூர், புலிவலம், நல்லவன்னிபட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.