துறையூர் மின் கோட்டத்துக்குள்பட்ட கொப்பம்பட்டி, து,ரெங்கநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (நவ.22) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து துறையூர் மின்கோட்ட செயற்பொறியாளர் ஆர்.தியாகராஜன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கொப்பம்பட்டி, து.ரங்கநாதபுரம், தளுகைமுருங்கப்பட்டியில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நவ.22 ( வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாக இங்கிருந்து மின்விநியோகம் பெறும் கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், மாராடி, வைரிசெட்டிப்பாளையம், பி. மேட்டூர், எஸ். என். புதூர், கே.எம்.புதூர், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூர், செல்லிபாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூர், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, த. மங்கப்பட்டி,த. பாதர்பேட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.