திருவெறும்பூர், உப்பிலியபுரம் ஒன்றியங்களில் நவ.27,29 ஆம் தேதிகளில்  திறன் பயிற்சி விழிப்புணர்வு முகாம்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், உப்பிலியபுரம் ஒன்றியங்களில் நவம்பர் 27,29 தேதிகளில் திறன் பயிற்சி விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், உப்பிலியபுரம் ஒன்றியங்களில் நவம்பர் 27,29 தேதிகளில் திறன் பயிற்சி விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைதேடும் இளைஞர்கள் கிராமப்புறங்களில் அதிகளவில் உள்ளனர், அவர்களுக்கான திறன் பயிற்சிகள், வேலைவாய்ப்பு விவரங்கள், திறன் பயிற்சிக்காக பதிவு செய்து போன்ற விழிப்புணர்வு செயல்பாடுகளை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வழங்கி வருகிறது.
இந்த செயல்பாடுகள் கிராமப்புற வேலைநாடுநர்களை சென்றடையும் வகையில் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும்  முகாம்களை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.  இதனடிப்படையில்,  நவம்பர் 27 இல் திருவெறும்பூரிலும், 29 இல் உப்பிலியபுரத்திலும் நடைபெறஉள்ளது. இவ்விரு  ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறும் திறன் பயிற்சி விழிப்புணர்வு முகாம்களில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com