மூன்று பொதுத்துறை வங்கிகளைஇணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி சாலை ரோட்டிலுள்ள விஜயா வங்கி அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் ஜி. ராமராஜூ தலைமை வகித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்.டி. ராமமூர்த்தி, இணைச் செயலர் அனந்த பத்மநாபன், பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கத்தின் துணைப் பொதுச் செயலர் ஜெகநாதன், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாவட்டத் தலைவர் குருமூர்த்தி, திருச்சி மாவட்ட வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலர் என். கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில், வங்கிகளை இணைக்கும் முடிவைக் கைவிடக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.