திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொருளாதார சரிவு, வேலையில்லா திண்டாட்டம், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு ஆகியவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு தெருமுனை பிரசாரக் கூட்டம் பெரியார் சிலை திடலில் நடைபெற்றது.
வட்டக்குழு உறுப்பினர் பி. பாலு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி.எஸ். இந்துராஜ், வட்டச் செயலர் என். ராஜகோபால் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வட்டக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், கண்ணன், சரவணன், கோபாலகிருஷ்ணன், கருப்பையா, இளமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எஸ்.எம். ஷாஜஹான் நன்றி கூறினார்.