இரு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட 2 பேருந்துகளின் கண்ணாடி


திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட 2 பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டன.
திருச்சியிலிருந்து திருவாரூர், தேவக்கோட்டைக்கு 2 பேருந்துகள் சனிக்கிழமை பிற்பகல் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு அரிஸ்டோ ரவுண்டானா வழியாக வந்து கொண்டிருந்தன. அப்போது, அங்கு வந்த ஒருவர் இரு பேருந்துகளின் மீது கற்களை வீசியதில் அவற்றின் முன்புற கண்ணாடி முழுவதும் உடைந்து விழுந்தது.
உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், நடத்துநர்கள் விரைந்து வந்து, கற்களை வீசிய நபரை பிடித்து தாக்கினர். தகவலறிந்து போக்குவரத்து போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து தாக்குதலுக்குள்ளான நபரை மீட்டனர்.
விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், மது அருந்தியிருப்பதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அரிஸ்டோ ரவுண்டானா அருகே சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com