திருச்சி மாநகராட்சி சார்பில் ஸ்ரீரங்கம் புஷ்பக் நகரில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
தொடர்ந்து , வீட்டுக் கழிவுகளை வீட்டிலேயே 30 நாள்களில் குழாய்கள் மூலம் உரமாக மாற்றும் திட்டம் அப்பகுதியிலுள்ள வீடுகளில் நடைமுறைப்படுத்துள்ளதை பார்வையிட்ட ஆணையர், வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் தூய்மை குறித்தும், மக்கும் குப்பைகளை உரமாக்கும் முறை குறித்து துண்டுப்பிரசுரங்களை வழங்கினார்.