மணப்பாறையில் உடற்கூறு ஆய்விற்குப்பின் தையலிடாமல் மயானத்திற்கு சடலம் கொண்டுவரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி ரயில் நிலையம் அருகே கடந்த செப்.21-ல் ரயில்வே தண்டவாளத்தில் தலை நசுங்கி இறந்து கிடந்த சுமார் 40 வயதுள்ள ஆண் சடலத்தை திருச்சி ரயில்வே போலீஸார் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கடந்த 4 நாட்களாக அவரை அடையாளம் காணமுடியாத நிலையில், செவ்வாய்க்கிழமை மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அந்த உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. பின் மணப்பாறை நகராட்சியின் நவீன எரிவாயு தகன பூங்காவில் சடலத்தை புதைக்க கொண்டு சென்றபோது சடலம் தையலிடாமல் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனை முதன்மை மருத்துவர் முத்துகார்த்திகேயன் கூறுகையில், விசாரணை மேற்கொண்டு துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.