பாரதிதாசன் பல்கலைக் கழக பெரியார் உயராய்வு மையத்தின் பெரியாரியல் சிறப்புச் சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் தமிழாய்வுத் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு வளனார் கல்வி நிறுவனங்கள் முன்னாள் அதிபர் எஸ். ஜான்பிரிட்டோ தலைமை வகித்தார்.பெரியாரின் இன்றைய தேவை எனும் தலைப்பில் பெரியார் உயராய்வு மைய முன்னாள் இயக்குநர் இரா. சக்குபாய் நெடுஞ்செழியன் சிறப்புரையாற்றினார். கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, பெண்ணடிமை ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, வன்கொடுமைக்கு எதிரான செயல்பாடுகள் ஆகியவற்றில் பெரியாரின் பங்களிப்பு குறித்து விளக்கப்பட்டது. தமிழாய்வுத் துறைத் தலைவர் பி. செல்வக்குமரன் வரவேற்றார். பாரதிதாசன் பல்கலைக் கழக பெரியார் உயராய்வு மைய இயக்குநர் (பொ) அ. கோவிந்தராஜன் நன்றி கூறினார். தமிழாய்வுத் துறை இளங்கலை, முதுகலை மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.