திருச்சி ஆக்ஸ்போர்டு பொ றியியல் கல்லூரியில் பிப். 23ஆம் தேதி சட்டத் திருவிழா நடைபெறவுள்ளது.
இது குறித்து அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் மாநில இணைச் செயலாளர் தி.சுசீலா கூறியது. திருச்சி ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள இவ்விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள்,உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளனர். தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு தேசிய சிந்தனையை வளர்க்க இத்திருவிழா நடத்தப்படுகிறது என்றார்.