முசிறியில் ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளரைக் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முசிறி -அந்தரப்பட்டிசாலையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர் வை.சிவராஜ் (73). கடந்த 12 ஆம் தேதி முசிறி கடைவீதிக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் சிவராஜை காணவில்லை. முசிறி காவல் நிலையத்தில் சிவராஜ் அண்ணன் மகன் கார்த்திகேயன் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து, சிவராஜை தேடி வருகின்றனர்.