3 சுயேச்சைகள் வேட்பு மனு

திருச்சி மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திருச்சி மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. திருச்சி மாவட்ட ஆட்சியரகம், வருவாய் கோட்டாட்சியரகம் ஆகிய இரு இடங்களில்  மனு தாக்கல் நடைபெறுகிறது. முதல்நாளான செவ்வாய்க்கிழமை ஒருவர் கூட மனு தாக்கல் செய்யவில்லை. இரண்டாம் நாளான புதன்கிழமை மூன்று பேர் மனு தாக்கல் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சி. கருப்பையா, திருச்சி தென்னூர் குத்பிஷா நகர் அ.சாதிக்பாட்சா, திருச்சி கீழகல்கண்டார்கோட்டை ச.சதீஷ்குமார் ஆகிய 3 பேரும் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சு.சிவராசுவிடம் மனுக்களை தாக்கல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com