துறையூர் நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதியில் தேர்தல் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.
துறையூர் வட்டாட்சியர் பிரகாஷ் வாகனப் பிரசாரத்தை தொடக்கி வைத்தார். தேர்தல் தனித் துணை வட்டாட்சியர் ஆனந்த், நகராட்சி சுகாதார ஆய்வாளர் தீபக் சக்ரவர்த்தி முன்னிலை வகித்தனர். முசிறி சரணாலயம் கலைக்குழுவினர் பேருந்து நிலையம், பாலக்கரை, சிலோன் ஆபீஸ், விநாயகர் தெரு, நாகம்மாள் கோயில், பிரிவுச் சாலை உள்ளிட்ட மக்கள் கூடுமிடங்களில்,நூறு சதவிகிதம் வாக்களித்தல், வாக்களிக்க பணம், பரிசு பொருள்கள் வாங்கக் கூடாது
உள்ளிட்ட தேர்தல் மற்றும் வாக்காளர் தொடர்பான விழிப்புணர்வுப் பாடல்களை பாடி ஆடினர்.