இன அரசியல்-21: ஹோலோடோமோர், சிரியா இனப்படுகொலை

இன அரசியல்-21: ஹோலோடோமோர், சிரியா இனப்படுகொலை

ஹோலோடோமோர் (Holodomor)

"ஹோலோடோமோர்" என்ற உக்ரேனிய  வார்த்தைக்கு பட்டினிக் கொலை (kill by starvation) என்று பொருள். இது பரவலாக பயன்படுத்தப்படுவதற்கு முன்னர், மற்றும் சில நேரங்களில் தற்போது பெரும் பஞ்சம் எனவும் குறிப்பிடப்படுகிறது. 1932 மற்றும் 1933 ஆம் ஆண்டுகளில் சோவியத் யூனியனில் பஞ்சம் ஏற்பட்டது, இது அதிகாரப்பூர்வமாக 7 மில்லியன் முதல் 10 மில்லியன் மக்களைக் கொன்றது. 

உக்ரேன் குடிமக்கள் மில்லியன் கணக்கான மக்களில், பெரும்பான்மையான இனத்தாரான உக்ரேனியர்கள், உக்ரேன் வரலாற்றில் முன்னோடியில்லாத ஒரு சமாதான பேரழிவில் பட்டினியால் இறந்தனர். 2006 ல், ஹோலோடோமோர் சோவியத் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட உக்ரேனிய மக்களின் படுகொலையாக உக்ரைன் மற்றும் 15 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது.

அறிவியலாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் இறப்பு எண்ணிக்கையின் ஆரம்ப மதிப்பீடுகள் 1.8 லிருந்து 12 மில்லியனுக்கும் அதிகமான உக்ரேனியர்களிடமிருந்து பஞ்சத்தை விளைவித்ததாக அறிவிக்கப்பட்டன. 2.4 மற்றும் 7.5 மில்லியனுக்கும் இடையேயான மதிப்பீட்டிற்கான மதிப்பீட்டை சமீபகாலமாக ஆய்வு செய்திருக்கிறது. இறப்புகளின் எண்ணிக்கையானது, பதிவுகள் இல்லாததால், தீர்மானிக்க கடினமாக உள்ளது, ஆனால் இந்த எண்ணிக்கையானது உக்ரேனிய மக்கட்தொகை நிறைந்த குபானில் உள்ள இறப்புகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகமால இருந்தது. பழைய மதிப்பீடுகள் இன்னும் அதிகம் காட்டப்படுகின்றன. 2010 ல் கியேவின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் கண்டுபிடிப்புகளின் படி, பஞ்சத்தின் காரணமாக மக்கள்தொகை இழப்பு 10 மில்லியனைக் கொண்டது, 3.9 மில்லியன் நேரடி பஞ்சம் இறப்புகளும், மேலும் 6.1 மில்லியன் பிறப்பு பற்றாக்குறையும் ஏற்பட்டன.

உக்ரேனிய சுதந்திர இயக்கத்தை அகற்றுவதற்காக ஜோசப் ஸ்டாலின் பஞ்சத்தால் திட்டமிட்டார் என்று சில அறிஞர்கள் நம்புகின்றனர். பஞ்சத்தை குறிப்பதற்காக ஹோலொடோமரைப் பயன்படுத்துவது அதன் மனிதனால் உருவாக்கப்பட்ட அம்சங்களை வலியுறுத்துகிறது. வெளிப்புற உதவியின் நிராகரிப்பு, அனைத்து வீட்டு உணவுப் பொருட்களையும் பறிமுதல் செய்தல், மற்றும் மக்கள்  இயக்கத்தின் கட்டுப்பாடு ஆகியவை, இனப்படுகொலை என வரையறுக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டவை என்று வாதிடுகின்றன. வாழ்க்கை இழப்பு ஹோலோகாஸ்டுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. காரணங்கள் இன்னமும் கல்வி விவாதத்திற்கு உட்பட்டுள்ளன, மேலும் சில வரலாற்றாசிரியர்கள் ஒரு இனப்படுகொலையாக அதன் பண்புகளை மறுக்கின்றனர்.

சிரியா இனப்படுகொலை (syria genocide)

சுமார் 30 வருடங்களாகச் சிரியாவை ஆட்சி செய்தவர் ஹஃபெஸ் அல் ஆசாத்(Hafez al-Assad). இவர், 1990-ல் ‘எதிர்க் கட்சிகளுக்கான சட்ட அங்கீகாரம் ஒருபோதும் கிடையாது’ என வெளிப்படையாக அறிவித்தார். இதனால், எதிர்க் கட்சிக்காரர்களின் பகையை அதிக அளவில் சம்பாதித்து வைத்திருந்தார். அப்போது, சில உள்நாட்டுப் பிரச்னைகள் தலைதூக்க ஆரம்பித்தன. 1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 98 சதவிகித வாக்குகளைப் பெற்று, நான்காம் முறையாக அதிபரானார் ஹஃபெஸ் அல் ஆசாத். பின்னர், இவருடைய இரண்டு மகன்களில் மூத்தவரான பசல் அல் ஆசாத்-தான் அடுத்த அதிபர் என மக்கள் நினைத்திருந்த நேரத்தில், கார் விபத்து ஒன்றில் அவர் மரணமடைந்தார்.

பஷார் ஹஃபெஸ் அல் ஆசாத்

ஷியா இயக்கத்தைச் சார்ந்த ஹஃபெஸ் அல் ஆசாத்தின் இளைய மகனான பஷர் அல் ஆசாத்((Bashar Hafez al-Assad), தேர்தலில் போட்டியிட்டு அதிபரானார். இவர் மீது கிளர்ச்சியாளர்களும், பயங்கரவாதிகளும் தனிக்கவனம் செலுத்த முக்கியக் காரணம். 70 சதவிகிதத்துக்கு மேல் சன்னி பிரிவு மக்கள் வாழும் ஒரு நாட்டை, ஷியா பிரிவைச் சார்ந்த ஒருவர் ஆளுவது என நினைத்ததன் விளைவுதான் இந்த உள்நாட்டு யுத்தத்துக்கான ஆரம்பம். அதுமட்டுமல்லாமல், பஷர் அல் ஆசாத்தால் தொடங்கப்பட்ட ‘சிரியன் எலெக்ட்ரானிக் ஆர்மி’யும் கிளர்ச்சியாளர்களையும், பிற நாட்டவர்களையும் கோபம் கொள்ளவைத்தது. இந்த ஆர்மியின் முக்கிய நோக்கம் துப்பாக்கி ஏந்திப் போராடுவது அல்ல, சைபர் அட்டாக். ஆம், எதிரிகளின் வலைப்பக்கங்களை ஹேக் செய்து தனக்குத் தேவையான தகவல்களை எடுப்பதாகும். இதுவும் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்ததற்கு மற்றொரு முக்கியக் காரணமாக அமைந்தது.

சிரியா உள்நாட்டுப் போர்!

பஷர் அல் ஆசாத் தலைமையிலான ராணுவத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த மிதவாத எதிர்க் கட்சிகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. எதிர்க் கட்சியைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள், அலெப்போ நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இந்த இருபிரிவுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நடக்கும் இந்த யுத்தமே, அப்பாவி பொதுமக்களின் வாழ்க்கையை அடியோடு அழித்து வருகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு!

சிரியாவில் உள்நாட்டுப் போரானது, ஒரு மதத்தின் இரு பெரும் பிரிவுகளுக்குள்ளேயே நடைபெறத் தொடங்கியது. இதிலிருந்து தனியாக உருவான அமைப்புதான் ஐ.எஸ்.ஐ.எஸ்

(இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்டு சிரியா). இந்த அமைப்பின் முக்கிய நோக்கம், ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இஸ்லாமிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதுதான். ஆரம்ப காலத்தில் சிரியாவுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த இந்த அமைப்பானது, தற்போது உலகம் முழுவதிலும் இயங்கிவருகிறது. சமீபத்தில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் இரண்டு இளைஞர்கள் இந்த இயக்கத்துக்காக ஆள் சேர்ப்புச் பணியில் ஈடுபட்டிருந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் உள்ளவர்கள், மதத்தை பற்றிய தவறான கருத்துகளை அங்குள்ள மக்களிடம் சொல்லி, அவர்களை தங்கள் வசபடுத்திக்கொள்வதாகவும், சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து பயங்கரவாதிகளாக மாற்றிவருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், பல அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்படுகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டுவரை இந்த அமைப்பால் தனிப்பட்ட முறையில் 33,000-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இந்த அமைப்பை அழிக்கும் நோக்கத்தில் சிரியா அரசு பல முறை தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்த அமைப்புக்கு உலகில் உள்ள பல இஸ்லாமிய நாடுகள் ஆயுதங்கள் வழங்கி உதவி செய்து வருவதால், இவர்களின் கை சிரியாவை நோக்கி ஓங்க ஆரம்பித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

போட்டித் தீவிரவாத அமைப்புகள்!

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக, பல தீவிரவாத அமைப்புகளும் சிரியாவில் தலைதூக்க ஆரம்பித்தன. உள்நாட்டு யுத்தம் ஒருபக்கம் என்றால், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்கள் மற்றும் போட்டி தீவிரவாத தாக்குதல்கள் மறுபக்கம்... இது சிரியாவுக்குப் பெரும் தலைவலியை உண்டாக்கி வருகிறது.

உள்நாட்டுப் போர்தானா?

இதை வெறும் உள்நாட்டுப் போர் என்று அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியாது. காரணம், ஆசாத்துக்கு ஆதரவாக ஷியா பிரிவைச் சேர்ந்த நாடான ஈரான், முழு ஒத்துழைப்பையும் தந்துகொண்டிருக்கிறது. மேலும், தனது நட்பு நாடான ரஷ்யாவும் முழு உதவியும் செய்துவருகிறது. அதேபோல், சவூதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட சன்னி பிரிவு நாடுகள் ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு உதவி செய்துகொண்டிருக்கின்றன. இவற்றுக்கு எல்லாம் மேலாக அமெரிக்காவும் தற்போது நேரடியாகவே உதவி செய்துவருகிறது. எனவே, சிரியாவில் நடப்பதும் பிறநாடுகளால் தூண்டப்பட்ட ஒரு யுத்தமே.

தற்போது சிரியா யுத்தத்தில் அதிக ஆர்வம் காட்டி வருவது எதிரெதிர் அணியில் இருக்கும் ரஷ்யப் படையும், அமெரிக்கப் படையும் மட்டுமே. அதனால்தான், இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே நிலவிவரும் கடும் தாக்குதலில் இரு பிரிவுகளிலும் அடிக்கடி வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். சுமார் 10 லட்சத்துக்கும் மேலானோர் சிரியாவைவிட்டு வெளியேறியுள்ளனர். ஆனால், சிரியாவில் ஆசாத் தலைமையிலான ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களின் படை வீரர்களுக்கும் இடையே உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற ஆரம்பகாலத்தின்போது சக்தி வாய்ந்த குண்டுகள் அதிக அளவில் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தம்!

நடந்துவரும் யுத்தத்தைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியும், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ராவும் ஜெனிவாவில் அண்மையில் சந்தித்துப் பேசினார்கள். அதில், ‘சிரியாவில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக இரு நாட்டுப் படைகளும் போரில் ஈடுபடாமல் இருக்கவேண்டும்’ என்ற சுமுக உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி, கடந்த செப்டம்பர் 12-ம் தேதி முதல் தனது ஆதரவு நாடுகளோடு சிரியா ராணுவ வீரர்களும், கிளர்ச்சியாளர்களும் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

உடன்படிக்கையை மீறிய சிரியா மற்றும் ரஷ்யப் படைகள்!

போர் நிறுத்தம் ஏற்பட்டு ஒருவார காலம்கூட ஆகவில்லை. அதற்குள் சிரியாவும், ரஷ்யாவும் இணைந்து, கிளர்ச்சியாளர்களிடம் நீண்ட நாட்களாக இருந்துவந்த அலெப்போ பகுதியை மீட்க உடன்படிக்கையை மீறினர்.
கடந்த 19-ம் தேதி இந்த இரண்டு படைகளும் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டன. அதாவது, தாக்குதல் நடத்தப்பட்ட ஓரிரு தினங்களில் மட்டும் சுமார் 1,900-க்கும் மேற்ப்பட்ட குண்டுகள் வீசப்பட்டன. இந்தத் தாக்குதலில் அலெப்போ பகுதியில் மட்டும் சுமார் 390 பேர் பலியாயினர். இதில், 96 குழந்தைகளும் அடங்கும். மேலும், இந்தத் தாக்குதலில் மூன்று லட்சத்துக்கும் மேலானோர் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதலினால் மருத்துவமனைகளும், மீட்புப்பணி நிலையங்களும் மிக மோசமான நிலையில் பாதிப்படைந்துள்ளன. இதன் காரணத்தால் மீட்புப்பணி நடைபெறாமலும், உரிய மருத்துவச் சிகிச்சை இல்லாமலும் மக்கள் மரணப்பிடியில் வாழ்ந்து வருகின்றனர்.

யுத்தத்தால் பலியானோர் விவரம்!

இந்தச் சண்டையினால் கடந்த 2011, 2012, 2013 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டும் ராணுவத்தினர் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோரும், கிளர்ச்சியாளர்கள் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், பொதுமக்கள் தரப்பில் 46 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் கொல்லப்பட்டு உள்ளனர். சண்டை உச்சநிலையில் இருந்த 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில், 42 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவத்தினரும், 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களும், 31 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி மக்களும் இறந்துள்ளனர். 2016-ம் ஆண்டின் கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் சுமார் 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் அனைத்துத் தரப்பினர்களையும் சேர்த்து மூன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். சுமார் 70 லட்சம் மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்துவருகின்றனர்.

யுத்தத்தால் பல குழந்தைகள் தாய். தந்தையரை இழந்து அனாதையானார்கள். பல பெற்றோர்கள் குழந்தைகளை இழந்து தம் வாழ்க்கையையே தொலைத்து நிற்க்கின்றனர்கள், பல லட்ச மக்கள் வீடுகளை இழந்து, பசி பட்டினியால் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்கின்றனர்.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com