பங்குச் சந்தைகளில் திடீர் சறுக்கல்

பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் திடீரென சுணக்கமடைந்தது.
பங்குச் சந்தைகளில் திடீர் சறுக்கல்


பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் திடீரென சுணக்கமடைந்தது.
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு சரிவு, வட்டி விகிதம் நிர்ணயம் குறித்த ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஏழு நாள்களுக்குப் பிறகு முதல் முறையாக பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டது.
ஐரோப்பா மற்றும் ஆசியப் பங்குச் சந்தைகளில் காணப்பட்ட மந்த நிலை இந்தியப் பங்குச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் வங்கி, வேகமாக விற்பனையாகும் நுகர் பொருள், மோட்டார் வாகன துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக இழப்பை சந்தித்தன.
சன் பார்மா, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ, என்டிபிசி, இன்டஸ்இண்ட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்யுஎல், யெஸ் வங்கி, ஏஷியன் பெயின்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி பங்குகளின் விலை 3 சதவீதம் வரை சரிந்தது.
அதேசமயம், ஓஎன்ஜிசி, இன்ஃபோசிஸ், விப்ரோ, வேதாந்தா, டிசிஎஸ், கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, பவர்கிரிட், பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல் பங்குகளின் விலை 2.52 சதவீதம் வரை அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 106 புள்ளிகள் சரிந்து 36,134 புள்ளிகளில் நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 14 புள்ளிகள் குறைந்து 10,869 புள்ளிகளில் நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com