அசோக் லேலண்ட் லாபம் ரூ.459 கோடி

ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் ரூ.459.57 கோடியாக அதிகரித்துள்ளது.
அசோக் லேலண்ட் லாபம் ரூ.459 கோடி


ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் ரூ.459.57 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டில் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் அசோக் லேலண்ட் நிறுவனம் செயல்பாடுகள் வாயிலாக ரூ.7,607.98 கோடி வருவாய் ஈட்டியது. இது, கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.6,076.38 கோடியுடன் ஒப்பிடும்போது 25.20 சதவீதம் அதிகமாகும்.
நிகர லாபம் ரூ.334.25 கோடியிலிருந்து 37.49 சதவீதம் அதிகரித்து ரூ.459.57 கோடியானது என அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.
அசோக் லேலண்ட்நிர்வாக இயக்குநர் தாசரி ராஜிநாமா
14 ஆண்டுகளாக அசோக் லேலண்ட் நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்த வினோத் கே. தாசரி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் அவர் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார். அவருடை தனிப்பட்ட முடிவுக்கு மதிப்பளிக்கும் வகையில் தாசரியின் ராஜிநாமாவை ஏற்றுக் கொள்வதென செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இது, 2019 மார்ச் 31 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com