மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் புதிய சிஎல்எஸ் மாடல் காரை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்) மைக்கேல் ஜோப் கூறியதாவது:
புதிய சிஎல்எஸ் 300டி கார் இந்திய சந்தைகளில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மெர்சிடிஸ்-பென்ஸ் அறிமுகம் செய்யும் 12-ஆவது தயாரிப்பாகும் இது.
மூன்றாம் தலைமுறைக்கான இந்தப் புதிய சிஎல்எஸ் மாடல் காரில் பிஎஸ் 6 விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையிலான இரண்டு லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் திறன் 180 கி.வா. ஆகும். இதன் விலை ரூ.84.7 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.
இப்புதிய மாடலில் ஸ்மார்ட்போன் ஒருங்கிணைப்புக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இது, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகிய தளங்களில் செயல்படக்கூடியது என்றார் அவர்.