திருப்பாம்பரம் ஒரு ராகு - கேது நிவர்த்தி ஸ்தலம். குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்பரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்பது ஸ்தலமகாத்மியம். ஆதிசேஷன் மற்றும் அஷ்ட்ட நாகங்களும் வழிபட்டதால் இத்ஸ்தலம் பாம்பு புரம் - திருப்பாம்புரம், எனப் பெயர் கொண்டது. இங்கு ஆதிசேஷன், பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றோர் பூஜை செய்த ஸ்தலம், இந்திரன் சாபம் நீங்கிய ஸ்தலம், கங்கை பாவம் தொலைந்த ஸ்தலம், சந்திரன் பழி நீங்கிய ஸ்தலம் என்று எண்ணற்ற பெருமைகளைக் கொண்ட ஸ்தலம் இதுவாகும். படங்கள் உதவி: கடம்பூர் விஜயன்