காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு பாதுகாப்பு படையினர் சென்ற வாகன அணிவகுப்பில் பயங்கரவாதிகள் நடத்தி கார் குண்டு தற்கொலை தாக்குதலில் 43 வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் விமானம் மூலம் தில்லி கொண்டுவரப்பட்டு, வீரர்களின் உடலுக்கு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தில்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.