ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கான படபூஜை தொடங்கியது. 24 ஏஎம் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். இஷா கோபிகர், பானுபிரியா, யோகி பாபு போன்றோரும் நடிக்கிறார்கள். இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ளது.