மண்ணும் மண்ணால் செய்யப்பட்ட பானையும் அத்தனை குளிர்ச்சியைத் தரக்கூடியவை என்பதை எவரும் மறப்பதற்கில்லை. மறுக்கவும் முடியாது. மண்பானை குடிநீரை குடித்தால் தாது விரையம் ஏதுமின்றி சுத்தமான குடிநீர் குடிப்பது நமக்கு நீண்ட ஆயுளை தரும். நீண்ட காலம்காலமாகவே நம்முடைய முன்னோர்கள் சமையலுக்கும், கஷாயம் போன்ற மருந்துப் பொருட்களைத் தயாரிக்க மண்பானைதான் பயன்படுத்தினர். பானை பிடித்தவள் பாக்கியசாலி என்பார்கள். பானைத் தண்ணீர் குடித்தவர்களும் பாக்கியசாலிகள்தான்.