நாகை: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 2 வயது பெண் குழந்தை மீட்ப்பு குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேதாரண்யம் அடுத்த புதுப்பள்ளியில் ஆழ்துளை கிணறு அமைக்க தோண்டிய 18 அடி ஆழம் கொண்ட ஆழ்த்துளை கிணற்றில் கார்த்திகேயன் என்பவரின் 2 வயது மகள் சிவதர்ஷிணி தவறி விழுந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தலைஞாயிறு மற்றும் வேளாங்கண்ணியில் இருந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினா் ஜேசிபி இயந்திரம் மூலம் பக்கவாட்டில் பள்ளம் தோண்டி 3 மணி நேர பேராட்டத்திற்கு பின்னர் குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர்.
மீட்கப்பட்ட குழந்தை சிவதர்ஷிணிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனக் குழுவினர் முதலுதவி சிகிச்சைக்கையுடன், நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், குழந்தை நலமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.