திருச்சானூர் பத்மாவதி கோயிலில் புதிய அன்னதான கூடம் திறப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருச்சானூர் பத்மாவதி கோயிலில் அன்னதான கூடம் திறக்கப்பட்டுள்ளது. 
திருச்சானூர் பத்மாவதி கோயிலில் புதிய அன்னதான கூடம் திறப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருச்சானூர் பத்மாவதி கோயிலில் அன்னதான கூடம் திறக்கப்பட்டுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்னதான கூடம் அமைந்துள்ளது. இங்குத் தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. விழாக் காலங்களிலும், பக்தர்கள் அதிகம் வரும் நேரங்களிலும் அன்னதான கூடத்தில் கடும் கூட்டநெரிசல் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில்கொண்டு 2-வது வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ் அருகே புதிய அன்னதான கூடம் கட்டப்பட்டது. பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட இந்த அன்னதான கூடத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பக்தர்கள் உட்கார்ந்து சாப்பிடலாம்.

கடந்த பிரமோற்சவம் திருவிழாவின் போது இந்த புதிய அன்னதான கூடம் செயல்படத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திருச்சானூர் பத்மாவதி அம்மன் கோயிலில் சுமார் 6.75 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அன்னதான கூடம் திறக்கப்பட்டது. இந்த அன்னதான கூடத்தை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுதாகர் திறந்து வைத்தார். இதன்மூலம் பக்தர்கள் சிரமமின்றி அன்னதானத்தைச் சாப்பிடலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com