கும்பகோணம், அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் ஆலய கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நேற்று இரவு, அருள்மிகு சோமேஸ்வரர் ஆலய வாயில் அருகில் நடைப்பெற்றது.
இவ்விழாவில், கந்த பெருமானாகிய குமரப்பர், குதிரை வாகனத்திலும், கார்த்திகேயர் மயில் வாகனத்திலும் எழுந்தருளி, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் குடந்தை கீழ் கோட்டம் அருள்மிகு நாகேஸ்வரர், சோமேஸ்வரர், பழனியாண்டவர் ஆகிய திருக்கோயில்களில் இருந்து முருகப் பெருமான்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்கள். பின்னர் ஸ்வாமிகள் வீதிஉலா வந்தன இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை தரிசனம் செய்தன.
குடந்தை ப.சரவணன் 9443171383