திருச்சி மலைக்கோட்டை மலை உச்சியில் கொப்பரை அமைக்கும் பணி தொடக்கம்

திருச்சி மலைக்கோட்டை கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி..
திருச்சி மலைக்கோட்டை மலை உச்சியில் கொப்பரை அமைக்கும் பணி தொடக்கம்

திருச்சி மலைக்கோட்டை கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி மலை உச்சியில் கொப்பரை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. 

நவம்பர் 23-ம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தென்கயிலாயம் என்றழைக்கப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான தீப திருவிழா மலையில் உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு கொப்பரை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. 

இதற்கான பூர்வாங்க பூஜை கடந்த 11-ம் தேதி நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கொப்பரையில் திரி வைப்பதற்கும், எண்ணெய் ஊற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திரியை கொப்பரையில் வைக்கும் பணி நேற்று தொடங்கியுள்ளது. எண்ணெய் முழுவதுவாக ஊற்றப்பட்ட பின் திரி அதில் நன்கு ஊறியதும், நவ.23-ம் தேதி கார்த்திகை தீப திருவிழா அன்று மாலை 6 மணிக்கு கொப்பரையில் தீபம் ஏற்றப்படம். இந்த தீபம் அணையாமல் தொடர்ந்து மூன்று நாட்கள் எரியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com