திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வளாகத்தில் உள்ள சீனிவாச பெருமாளுக்கு பக்தர் ஒருவர் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி கவசங்களை நடைகொடையாக வழங்கினார்.
ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வளாகத்தில் சுந்தரராஜ பெருமாள் சீனிவாச பெருமாள் உள்ளிட்ட சந்நிதிகள் உள்ளன.
இதில் சீனிவாச பெருமாளுக்கு உள்ளூரில் உள்ள பக்தர் ஒருவர் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளியில் ஆன கவசங்களை நன்கொடையாக வழங்கினார். இதை அவர் திருச்சானூர் கோயில் அதிகாரிகளிடம் அளித்தார்.