ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோயிலுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆண்டுதோறும் கைசிக ஏகாதசி அன்று ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமிக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். அதன்படி திங்கள்கிழமை கைசிக ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து சென்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சமர்ப்பித்தார்.
அதை எதிர் கொண்டு வரவேற்று ஸ்ரீரங்கம் கோயில் அர்ச்சகர்களும், அதிகாரிகளும் பெற்றுக் கொண்டனர்.