வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் உள்ள அருள்மிகு கிரிராஜகன்னிகாம்பாள் உடனுறை அருள்மிகு ஜலநாதீஸ்வரர் திருக்கோயிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் 3-வது குருபாரிகார ஸ்தலத்தில் அருள்மிகு தட்சிணாமூர்த்தி அபூர்வ திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இக்கோயிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு புரட்டாசி மாதம் 18-ம் தேதி (04.10.2018) வியாழக்கிழமை ஏகாதசி, ஆயில்ய நட்சத்திரம் 1-ம் பாதம், இரவு 40 நாழிகை இரவு 10.00 மணிக்கு ரிஷப லக்கினத்தில் அருள்மிகு குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும் பிரவேசம் ஆகிறார்.
இதை முன்னிட்டு தக்கோலம் எனும் திருவூறல் திவ்ய ஷேத்திரத்தில் அபூர்வ திருக்கோலத்தில் வீற்றிருக்கும் குருபகவான் அருள்மிகு தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார தரிசனம் நடைபெற உள்ளதால் அன்பர்கள் தரிசித்து நற்பயன் பெற வேண்டுகிறோம்.
பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்: மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம்
நலம் தரும் ராசிகள்: மீனம், ரிஷபம், கடகம், துலாம், மகரம்
லட்சார்ச்சனை பிரசாதப் பையை ரூ.100/- யை கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம். அர்ச்சனை கட்டணம் ரூ.3 வசூலிக்கப்படுகிறது.