வரதராஜப் பெருமாள் கோயில் தெப்போற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை தெப்போற்சவம் தொடங்கியது.
தெப்போற்சவத்தில் வலம் வந்த வரதராஜப் பெருமாள். (உள்படம்) உற்சவர்கள்.
தெப்போற்சவத்தில் வலம் வந்த வரதராஜப் பெருமாள். (உள்படம்) உற்சவர்கள்.


காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை தெப்போற்சவம் தொடங்கியது.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் தைப்பூச தெப்போற்சவ விழா 3 நாள்களுக்கு நடைபெறுவது வழக்கம். அதன்படி, முதல் நாள் தெப்போற்சவம் திங்கள்கிழமை இரவு தொடங்கியது. அப்போது, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார், பெருந்தேவி தாயாருடன், அனந்தசரஸ் தெப்ப குளத்தில் வரதராஜப் பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து, மூன்று முறை வலம் வந்தார். 
அதுபோல், இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற தெப்போற்சவத்தில் 5 முறை வலம் வந்தார். இதைத்தொடர்ந்து, மூன்றாவது நாளான புதன்கிழமை 7 முறை வலம் வருகிறார். தெப்போற்சவத்தில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com