குழந்தைப்பேறு கிட்டுமா? பிரசன்ன ஜோதிடத்தில் இதெல்லாம் கூட இருக்கிறதா?

ஒரு ப்ரஸ்ன ஜோதிடரிடம், ஒரு பெண் தமக்கு எப்போது சந்தான பாக்கியம் உண்டாகும்?
குழந்தைப்பேறு கிட்டுமா? பிரசன்ன ஜோதிடத்தில் இதெல்லாம் கூட இருக்கிறதா?

கேரளீய ப்ரஸ்ன ஜோதிடம் மூலம் ஸ்லோகங்களும் அதன் விளக்கங்களையும் பார்ப்போம். 

ஸுயால் பூம்வர்க்தே,

லக்னகே பிரயுக்கேத,

ஸுதி :பூம்ஸ :

பூம் கிரக லோகி கேந்த,

யூகமே க்ஷேத்ரே,

நார்ய ஸ்த்ரீ கிரகா,

லோக பாஜி தூ,

ஸ்திதீ பவேல்,

கர்ப்பா ஸம்ஸ்தோ, இதி ;

தமிழ் விளக்கம்

ஒரு கர்ப்பிணியாகியிருக்கும், பெண் எந்த குழந்தை பெற்றெடுக்கக்கூடும், என்று ப்ரஸ்ன ஜோதிடம் பார்க்கும்போது, ப்ரஸ்ன லக்னத்தில், குரு, சூரியன், செவ்வாய் போன்ற 

ஆண் கிரகங்கள், ஆண் ராசி வீடுகளில் இருந்தாலோ, அல்லது பார்த்தாலோ, நவாம்ஸத்தில் அதுபோல் இருந்தாலோ, நிச்சயமாக ஆண்குழந்தை பிறக்கும். அதேபோல், 

ப்ரஸ்னலக்னம், பெண் ராசி வீடாக இருந்து அந்த வீட்டில், பெண் கிரகங்கள், சந்திரன், சுக்கிரன், இருந்தால் பெண்குழந்தை பிறக்கும். 

அதற்கு மாறாக, ப்ரஸ்ன இராசி வீட்டில் அலிக் கிரகங்கள், சனி, கேது போன்றவை இருந்திருந்தால், குழந்தைகள் வளரும்போது, திருநங்கை ஆக மாறிவிடும். 

***

ஒரு ஸ்த்ரீயின் கர்ப்பம்.

ப்ரஸ்னாந்த்ர மாசு,

தூரே ஸமனம், கஸ்யாபி,

வான்யஸ்ய வா,

தத்ராகம்ய, கதிபூதம்,

மல பரித்யா கஞ்ச,

கர்ஷணாதித ;

தாம்பூலேஷபி,

பஞ்சமஸ்ய, தளனம்,

ப்ரஷ்டா விதீர்ணேஷிஹ,

வ்யாஸம்ஞ்சய வஸ்ய,

பஞ்ச கதிதா,

கர்ப்ப ஸுத்ரே ஸுஸகா ;

கர்ப்பிணியகர், பக தர்ஸனம்,

ஹனரவோ, வித்யாந்த்ய யுத்தம், ததா,
 
ஸர்ப்புஷ்டி ப்ரஷ்டுரதோ,

பூஜர் பதன ஸாம்,

கஸ்யாபி சாகர்ஷணம்,

ஆரூடே யதி, வோதயே,

யுதி த்யுசௌ புத்ரே,

யுதிர் வாப்யகோர்,

கர்ப்போ ஸ்திதி வதே சதூர்த்ச,

ஸத்யதேஷு கஸ்மிணபீ :

தமிழ் விளக்கம்

ஒரு ப்ரஸ்ன ஜோதிடரிடம், ஒரு பெண் தமக்கு எப்போது சந்தான பாக்கியம் உண்டாகும்? என்று கேட்டுக்கொண்டிருக்கும்போது.. அந்த, இடத்திலிருந்து யாராவது ஒருவர்..

வெளியே சென்றாலோ? அல்லது யாராவது, ஒருவர் தங்களது கைவிரல்கள் மூலம் காதுகளை நோண்டிக்கொண்டிருந்தாலோ அல்லது ப்ரஸ்னஜோதிடம் பார்க்கின்ற நேரத்தில், வெளியே, ஏதாவது பெண் தன்னுடைய குழந்தையின் குதத்தைக் கழுவிக் கொண்டிருந்தாலோ? அல்லது ப்ரஸ்னஜோதிஷம் பார்க்கக்கொண்டு வந்திருக்கும் வெற்றிலையில், ஐந்தாவது வெற்றிலையில், ஓட்டை விழுந்திருந்தாலோ? அல்லது அந்த வெற்றிலையானது அழுகியிருந்தாலோ? அல்லது அந்த வெற்றிலையின் மீது, ஏதாவது அழுக்குகள், ஒட்டியிருந்தாலோ? அல்லது அந்த வெற்றிலையின் மீது, ஏதாவது சிறியவித பிராணிகள் ஒட்டி இறந்திருந்தாலோ?
 
அந்த பெண்ணிற்குக் கர்ப்பம் ஆகி கர்ப்ப நாசம் ஆகிவிடும். அதேபோல், ஒரு பெண்ணிற்கு நெடுநாட்களாகத் திருமணம் நடந்து புத்திரபாக்கியம் கிடைக்காமலிருந்தால், ஜோதிடரைக் கண்டு சந்தான பாக்கியம் உண்டா? இல்லையா? என்று கேட்கும்போது, நல்ல சகுனங்கள் ஆக, ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணை காணுதல்! அழகுடன் கூடிய குழந்தைகளைக் காணுதல்! வானத்தில், இடி இடித்த சத்தம் கேட்டல்!

பறவைகள் சப்தமிட்டுகொண்டே வானத்தில் பறந்துபோகும் காட்சியைக் காணுதல்! ஜோதிடம் பார்க்க வந்தவர்களில், யாராவது, ஒருவர், எதேச்சையாக தன்னுடைய வலது கையை தொட்டுத் தேய்த்தல்! அல்லது வலது கால் விரல்களைத் தொடுதல்! அல்லது தங்கள் மூக்கை தொடுதல்! அதேபோல் ப்ரஸ்னஜோதிடம் பார்க்கும்போது, கோட்சாரமாக ஐந்தாம் பாவத்தில், சுக்கிரன் இருந்தாலோ? அல்லது ப்ரஸ்ஜ ராசியைப் பார்த்தாலோ? அல்லது, ஐந்துக்குரியவன். இலக்கினத்திலிருந்தாலோ? அல்லது கோட்சாரமாக தற்போது, ஐந்தாம் பாவத்தில், குரு பகவான் சஞ்சரித்துக்கொண்டிருந்தாலோ? நிச்சயமாக அந்த பெண் கூடிய சீக்கிரம் கர்ப்பிணி ஆவாள்.

- அஜய்குமார்

செல் - 8056203692, 8903413692 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com