ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.2.77 கோடி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ.2.77 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.


ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ.2.77 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.2.77 கோடி வருவாய் கிடைத்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

85,911 பேர் தரிசனம்
ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 85,911 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 38,198 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 
திங்கள்கிழமை காலை நிலவரப்படி 17 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்களின் தரிசனத்திற்கு 16 மணிநேரம் வரை தேவைப்பட்டது. நடைபாதை, நேர ஒதுக்கீடு, விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 3 மணிநேரத்திற்குள் ஏழுமலையானை தரிசித்து திரும்பினர்.
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 11,390 பக்தர்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் 6,208 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 21,312 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயிலில் 1,256 பக்தர்களும், கபில தீர்த்தத்தில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலில் 3,189 பக்தர்களும் ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்துததாக தேவஸ்தான மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.
சோதனைச் சாவடி வசூல் ரூ.2.07 லட்சம்: அலிபிரி சோதனைச் சாவடியை சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிமுதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.59 மணிவரை 82,566 பயணிகள் கடந்துள்ளனர். 9691 வாகனங்கள் இச்சாவடியைக் கடந்து சென்றுள்ளன. அதன் மூலம் ரூ.2.07 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறி வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம் ரூ.20,333 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ.16.37 லட்சம் நன்கொடை
ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பலவித வசதிகளை அளித்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.2.25 லட்சம், கோசம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.1.01 லட்சம், சீனிவாசசங்கராநேத்ராலயா அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ.1.11 லட்சம், சர்வஸ்ரேயா அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், வேத பரிரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் என ரூ.16.37 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com