இந்த தீபாவளி மலர் இரண்டு புத்தகங்களாக மலர்ந்துள்ளது. இந்த மலரில் பல்வேறு நதிகள் பற்றிய கட்டுரைகள் உள்ளன.
தஞ்சாவூர் கவிராயரின் "வந்தாய் வாழி காவேரி', காந்தலட்சுமி சந்திரமௌலியின் "தாம்ரபர்ணீ நதி' உள்ளிட்ட கட்டுரைகள் சம்பந்தப்பட்ட நதிகள் உருவானது, அவற்றின் சிறப்பு உள்ளிட்டவற்றை நயம்பட எடுத்துரைக்கின்றன. அவற்றின் படங்களும் சிறப்பான முறையில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. நதிகள் தவிர, ராமன் காத்த ஏரி, சில்கா என்றால் பிரம்மாண்டம், ஏரி நகரம் உதய்பூர், குற்றாலமும் குறவஞ்சியும் உள்ளிட்டவை அரிய தகவல்களைத் தாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபல எழுத்தாளர்கள் தேவிபாலா, படுதலம் சுகுமாரன் உள்ளிட்டோரின் சிறுகதைகளும், எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் திகில் அனுபவங்கள் உள்ளிட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஆன்மிகத் தகவல்களுடன் கார்ட்டூன் உள்ளிட்ட பல்சுவை அம்சங்களும் உள்ளது இந்த மலரின் சிறப்பாகும்.