திருச்சி விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து ரூ.17.45 லட்சம் மதிப்பு வெளிநாட்டு கரன்சி இன்று பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சியிலிருந்து இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு விமானத்தில் செல்லவிருந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை செய்தனர்.
இதில், ரியாஸ் அகமதுவின் உடைமைகள் சோதனையிடப்பட்டதில், இந்திய நாட்டின் பணமதிப்பின்படி ரூ.17.45 லட்சம் மதிப்பு டாலர், யூரோ, ஆஸி மற்றும் டாலர்கள் கரன்சிகள் வைத்திருந்தது தெரிய வந்ததையடுத்து, பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக ரியாஸ் அகமதுவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.