கஜா புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பருவத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் இன்று மாலை கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்க இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வு நெறியாளர் க. துரையரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.