கஜா புயலால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் காரணமாக, நாகப்பட்டினம், தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, கடலூா் மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து புயலால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கண்ட மாவட்டங்களில் நவம்பா் 15 முதல் 25-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய மின்நுகா்வோர் 30-ஆம் தேதி வரை அபராதமின்றி மின்கட்டணத்தைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.