சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக 4 ரயில்கள் செங்கனூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை-திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் வரும் 25-ஆம் தேதி முதல் 2019 ஜனவரி 20-ஆம் தேதி வரை செங்கனூரில் தற்காலிகமாக நின்று செல்லும். இந்த ரயில் செங்கனூர் ரயில் நிலையத்துக்கு அதிகாலை 3.48 மணிக்கு சென்றடையும். 3.50 மணிக்கு புறப்படும்.
மறுமார்க்கத்தில் திருவனந்தபுரம்-சென்னைக்கு இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் வரும் 24-ஆம் தேதி முதல் 2019 ஜனவரி 19-ஆம் தேதி வரை தற்காலிகமாக நின்று செல்லும். இந்த ரயில் செங்கனூர் ரயில் நிலையத்தை இரவு 10.23 மணிக்கு வந்தடைந்து, 10.25 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.
திருவனந்தபுரம்-நிஜாமுதீன் இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் வரும் 24-ஆம் தேதி முதல் 2019 ஜனவரி 19-ஆம் தேதி வரை தற்காலிகமாக நின்று செல்லும். இந்த ரயில் செங்கனூர் ரயில் நிலையத்தில் அதிகாலை 2.28 மணிக்கு வந்து, மீண்டும் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும்.
மறுமார்க்கமாக நிஜாமுதீன்-திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் வரும் 26-ஆம் தேதி முதல் 2019 ஜனவரி 21வரை செங்கனூரில் தற்காலிகமாக நின்று செல்லும். இந்த ரயில் செங்கனூரில் முற்பகல் 11.18 மணிக்கு வந்து, 11.20 மணிக்கு புறப்பட்டு செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.