கருணாஸ் பேசியதற்கான பலனை அனுபவிப்பார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
கருணாஸ் பேசியதற்கான பலனை அவர் அனுபவித்தே ஆக வேண்டும். சட்டத்தை மீறி யார் பேசினாலும் அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். கருணாஸ் பேசியது முதல்வரின் கவனத்திற்கு சென்றுள்ளது.
மக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம், ஆனால் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது முக்கியம். எம்எல்ஏக்கள் ஒற்றுமையாக இருந்துதான் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர விரும்பினர். கூவத்தூர் பற்றி கருணாஸ் பேசுவது மிகப்பெரிய நகைச்சுவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்மையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கருணாஸ், காவல்துறையை மிரட்டும் தோணியில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.